News March 6, 2025
கடைசி நேரத்தில் ரயிலில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்

நெல்லை, கொல்லம், குருவாயூர் ரயிலில் நெல்லை, நாகர்கோவில் இடையே உள்ளிட்ட தென்னக ரயில்வேயின் 35 முக்கிய விரைவு ரயில்களில் டி ரிசர்வ் டிக்கெட் வசதி உள்ளது. இதன் மூலம் காலியாக செல்லும் படுக்கை பெட்டியில் பயணிக்க வசதி கிடைக்கிறது. இந்த வசதியை விரைவில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளதாக தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. *எல்லோரும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க*
Similar News
News August 7, 2025
நெல்லையில் இன்று கைத்தறி தின கண்காட்சி

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை: பதினோராவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 7ம் தேதி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட உள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்க கைத்தறி ஜவுளிகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
நாரணம்மாள்புரம் பகுதியில் குவாரிக்கு தடையில்லா சான்று

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது சலீம் பாதுஷாவுக்கு நாரணம்மாள்புரம் பகுதியில் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://parivesh.nic.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது.
News August 6, 2025
சுர்ஜித், எஸ்ஐ சரவணனை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

நெல்லையில் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோர் நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் அமர்வு தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (06.08.2025) மனு தாக்கல் செய்தனர்.