News April 13, 2025

கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

image

அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 27, 2025

குமரி அருகே ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி

image

தமிழ்நாடு ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்டது. எண்ணெய் & எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் கடந்த வாரம் ஏலம் இறுதி செய்யப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு குமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

குமரி மாவட்டத்தில் மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஏப்.27) மதியம் 1 மணி வரை மழை நீடிக்கவுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News April 27, 2025

வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான முகாமை எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 30 டாக்டர்கள் அடங்கிய குழு அவர்களுக்குபல்வேறு வகையான உடல் தொடர்பான சோதனைகளை மேற்கொண்டது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!