News March 23, 2025
கடற்கரைக்கு வருவோர் கடலில் குளிக்க வேண்டாம் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று மாலையில் ஏராளமானோர் கடற்கரைக்கு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல்துறை அறிவுறுத்தல்.
Similar News
News April 7, 2025
மயிலாடுதுறை: போராட்டம் அறிவிப்பு

மயிலாடுதுறையில் உண்ணாவிரத போராட்டம் ஏப்.8ஆம் தேதி நடைபெறுமென தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதில், தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும், குத்தகை விவசாயிகள் சாகுபடி உரிமையை உறுதிப்படுத்தி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போரட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
News April 6, 2025
மயிலாடுதுறை: அனைத்தும் அருளும் அமிர்தகடேஸ்வரர்

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News April 6, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், `இணையதளங்களில் உங்களுக்கு பரிசு பொருள் கிடைத்திருக்கிறது, பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் என போலியாக வரும் மோசடிக்காரர்கள் சித்தரிக்கும் பரிசு வலையில்` பொதுமக்கள் விழ வேண்டாமென கூறியுள்ளனர். மேலும், சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.