News March 13, 2025

ஏம்பல் அருகே விசூர் ஏரியில் முதியவர் சடலம் மீட்பு

image

ஏம்பல் அருகில் உள்ள விசூர் கண்மாயில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட சாய்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் விசூர் ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு இருந்தவர் எப்படி ஏரியில் விழுந்தார் என்பது தெரியவில்லை. அவரது உடலை ஏம்பல் காவல் துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 

Similar News

News April 17, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 17.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்

News April 17, 2025

நாளை வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க!

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் மறக்காம ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

புதுக்கோட்டை : ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய<> tnpsc.gov.in<<>> என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

error: Content is protected !!