News March 15, 2025

ஏப்.30ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்

image

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் தலைமை தோ்தல் ஆணையராக ஞானேஷ்குமாா் பொறுப்பேற்றுள்ளாா். இவரது தலைமையில் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோ்தல் அலுவலா்களிடம் தீா்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கருத்துருக்களையும், ஆலோசனைகளையும் வரும் ஏப்.30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 15, 2025

காஞ்சிபுரதிற்கு புதிய நெல் சேமிப்பு வளாகம்  

image

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.17,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் நெல் சேமிப்பு வளாகங்கள், 25,000 இரும்பு இடைச்செருகுக் கட்டைகள் உள்ளிட்டவை செயல்படுத்திட ரூ. 480 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

News March 15, 2025

ரூ.148 கோடி செலவில் புதிய தொழில் பயிற்சி நிலையங்கள்

image

காஞ்சிபுரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உதவியுடன் 148 கோடி ரூபாய் செலவில், காஞ்சிபுரம் உட்பட்ட 7 மாவட்டங்களில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைய உள்ளன. சுமார் 6 தொழிற்பிரிவுகளுடன் இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என 2025-26ஆம் ஆண்டின் தமிழக அரசு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2025

காஞ்சிபுரம்: வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு

image

காஞ்சிபுரம், ஏனாத்தூர் அமைந்துள்ள சங்கர பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற மார்ச் 15 சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்த உள்ளனர். வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும்.

error: Content is protected !!