News March 30, 2024

எம்ஜிஆர் – நம்பியார் சண்டை வேண்டாம்

image

சாமியார் தோட்டம் அருகே உள்ள ராஜலட்சுமி நகரில் இரு வேட்பாளர்களும் நேர் எதிரில் சென்றபோது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கி போய் விடுவோம் என பேசியதை கேட்டு வேட்பாளர் உட்பட பிரச்சாரத்திற்கு வந்த அனைவரும் குழம்பினர். மேலும், எம்ஜிஆர், நம்பியார் போல சண்டையிட்டு கொள்ள வேண்டாம் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Similar News

News April 20, 2025

4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை முயற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கடம்பன் குளம் அருகே நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு கணவன் மனைவி தற்கொலைக்கு முயற்சி; கணவன் கவலைக்கிடம், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு ஆறு மருத்துவர்கள் கொண்ட குழு ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News April 19, 2025

திண்டுக்கல் காவல் வாகனங்கள் ஆய்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அவர்கள் இன்று (19.04.2025) ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் வாகனங்கள், குறிப்பாக உதிரிபாகங்கள் மாற்ற வேண்டிய வாகனங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது

News April 19, 2025

பழனி: பெண் சிசுவை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்

image

பழனி அருகே சண்முக நதி சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஓட்டி ஒருவர் சென்று பார்த்தபோது பையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் குழந்தையின் சிசுவை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!