News August 15, 2024
எம்.பி. ஜோதிமணியின் சுற்றுப்பயண விவரம் வெளியீடு

கரூர் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். தொடர்ந்து இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற 16ஆம் தேதி அன்னவாசல் ஒன்றியத்தில் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
Similar News
News August 9, 2025
புதுகை விநாயகர் சிலை, ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுகை மாவட்டத்தில் விநாயகர் சிலை செய்வோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு சிலைகளை செய்ய வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிமணிகள் பூஜை பொருட்கள் பூக்கள், எல்இடி விளக்கு உள்ளவற்றை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், தெர்மாகோல், ரசாயனம் கொண்ட சாயங்கள், எண்ணை வண்ணப் பூச்சுகளை, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகளை பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
புதுகை:இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக எண்களை பயன்படுத்தி கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News August 8, 2025
அரசு மீன் பண்ணையில் மீன் குஞ்சுகள் விற்பனை கலெக்டர் அருணா தகவல்

புதுகை மாவட்டத்தில் தட்டாமலைபட்டி, கருவிடைசேரி, குருங்களூர், அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில், தற்பொழுது பருவமழை காரணமாக இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு, மிர்கால், மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மீன் வளர்ப்பு கண்மாய், குளங்களில் அரசு விலையில் மீன் குஞ்சுகள் வளர்க்க மீன்வள சார் ஆய்வாளர்களை 8248970355, 9751616866 தொடர்பு கொள்ள கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.