News February 22, 2025
ஊரக வளர்ச்சித்துறை சங்க மாநாட்டில் மோதல்; ஊர்வலம் ரத்து

தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு ராமநாதபுரத்தில் பிப்.20, 21ல் நடந்தது. இதில் பல மாவட்டங்களில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நேற்று மதியம் நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் இருதரப்பினரிடையே திடீரென கைகலப்பு, மோதல் ஏற்பட்டதால் நேற்று நடக்க இருந்த பொது மாநாடு, ஊர்வலம் ரத்து செய்யப்பட்டன.
Similar News
News April 20, 2025
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா விவர பட்டியல்

பரமக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளின் விவரம் இன்று (20-04-25)
வெளியானது. வருகின்ற சித்திரை-15 (29-04-25)
காப்புகட்டுதல் தொடங்கி
13 நாட்கள் திருவிழா
வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. (12-05-25) திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திருக்கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
நீங்கள் சாப்பிடும் மாம்பழம் இயற்கையானதா & செயற்கையானதா?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *ஷேர் பண்ணுங்க