News March 16, 2025

உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

image

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன்  கூறுகையில், வடை, உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கி உண்ணும் போது, அதில் உள்ள எண்ணெயை காட்டிலும், தாளில் உள்ள மையால் பாதிப்பு அதிகம். விற்பனையாளர்கள் பிளேட், வாழை, தேக்கு இலைகளை பயன்படுத்தவும், பார்சல் கட்ட தாளின் மேல் இலை வைத்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவும், தாளும் நேரடி தொடர்பில் இருக்க கூடாது என்றார்.

Similar News

News March 17, 2025

கோவை: குறை தீர்ப்பு கூட்டம் ரத்து

image

கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (மார்ச்.18) நடைபெற இருந்த மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சார்பில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 17, 2025

BREAKING: வானதி சீனிவாசன் கைது

image

பாஜக சார்பில் இன்று(மார்ச்.17) டாஸ்மாக் ஊழலை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவி, கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை, ஆர்ப்பாட்டம் செல்லும் வழியிலே போலீசார் கைது செய்தனர்.

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

கோவையில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

error: Content is protected !!