News January 1, 2025
ஈரோட்டில் கடந்த ஆண்டு 98 பேர் பலி

ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 2024ம் ஆண்டு, ரயில்களில் அடிபட்டு 84 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 98 உயிரிழந்துள்ளனர். இதில், 71 பேர் அடையாளம் காணப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 10 பேர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களில் ஒரு சிலர், ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.
Similar News
News August 11, 2025
ஈரோட்டில் இலவச லாரி ஓட்டுநர் பயிற்சி! APPLY NOW

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி ஓட்டும் பயிற்சி, பாதுகாப்பு, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 11, 2025
அந்தியூர்: அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பலி

அந்தியூர் பள்ளிபாளையம் சர்வஜோதி நகரை சேர்ந்தவர் குப்புசாமி (52). அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறைக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி உயிரிழந்தார். அந்தியூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
News August 10, 2025
ஈரோடு: சகல தோஷங்கள் நீக்கும் கோயில்!

ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில் முத்து வேலாயுதசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பழைய ஏட்டுச் சுவடி பாடல் ஒன்றில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கினால் கொடிய நோய்களும் குணமாகி விடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், தன்னை நாடி வரும் பக்தர்களின் நாக தோஷம் புத்திர தோஷம் உட்பட சகல தோஷங்களையும், பிரச்சினைகளை உடனுக்குடன் தனது பார்வையாலேயே தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. SHAREIT