News September 15, 2024
ஈரோட்டில் இவ்வளவு பேர் ஆப்சென்ட்டா?

தமிழ்நாட்டில் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 25,475 பேர் குரூப் 2 தேர்வு விண்ணப்பித்திருந்தனர். இதில் 18,943 பேர் தேர்வு எழுதினர். 6,532 பேர் தேர் எழுத வரவில்லை. மேலும் ஈரோடு – தெற்குப்பள்ளம், தி பாரதி வித்யா பவன் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வினை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
Similar News
News August 7, 2025
ஈரோடு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த புகாரின் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சித்தோடு சாணார்பாளையத்தை சேர்ந்த சூர்யா (25) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சூர்யாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
News August 6, 2025
மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர்

தாளவாடி ஊராட்சி ஒன்றியம் ஆசனூர் அருகே அரேப்பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறித்து ஆய்வு செய்தபோது புத்தகங்களை வாசிக்க சொல்லி ஆய்வில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்களுடன் இருக்கையில் அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் உடன் இருந்தனர்,
News August 6, 2025
ஈரோடு: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

ஈரோடு மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<