News April 17, 2025

ஈரோடு: தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை!

image

ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

Similar News

News April 30, 2025

ஈரோட்டில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

image

பெருந்துறை அருகே தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரகு (29). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரிடம் ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரத்தைப் பறித்துச் சென்றது. இந்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்படுருந்தநிலையில் தலைமறைவாக இருந்த பால கண்ணன் (39) மற்றும் கல்லூரி மாணவரான கார்த்திகேயன் (20) ஆகிய இருவரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News April 29, 2025

ஈரோடு: இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம் 

image

ஈரோடு, பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் ,அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ் ராஜ் இவரது மனைவி ஜானகி வயது 30, இவருக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணேஷ் ராஜ் மில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் திரும்பி நள்ளிரவு வந்த பொழுது அவரது மனைவி ஜானகி தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.

News April 29, 2025

ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்

image

ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக்கூட்டம் நாளை 30.04.2025 ஆம் தேதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்திற்கு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் பொறுப்பு தனலட்சுமி முன்னிலையில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறு மேயர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!