News April 9, 2025
ஈரோடு: கடன் பிரச்சனையை தீர்க்கும் கால பைரவர்!

ஈரோடு ஆவல்பூந்துறை, ராட்டை சுற்றிபாளையத்தில், 39 அடி உயர பிரமாண்ட சிலையுடன் கூடிய, கால பைரவர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News August 9, 2025
ஈரோட்டில் நேற்றைய வெப்பம் பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஈரோட்டில் 35.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்
News August 8, 2025
ஈரோடு அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை

பவானிசாகர் காவலர் குடியிருப்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி சேர்ந்த காவலர் சதீஷ்குமார் 35 என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவருடைய மனைவி கீதா ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார், போலீஸ் விசாரணையில் தலைவலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
News August 8, 2025
ஈரோடு: ரூ.70,000 பணம், தங்கம் தந்து இலவச திருமணம்!

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், இந்து அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT