News March 24, 2025
ஈரக் கையுடன் சார்ஜ் போட்ட சிறுமி உயிரிழந்த சோகம்

சென்னையை அடுத்து எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஓட்டுனர் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14). கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வு நெருங்கும் நிலையில் படித்து வந்த இவர் இவர் கடந்த சனிக்கிழமை ஈர கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Similar News
News April 20, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (20.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News April 20, 2025
ஏ.சி., ரயில் பொது மக்களிடம் கருத்து கேட்பு

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே முதல் குளிர்சாதன மின்சார சேவை நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாளொன்றுக்கு மொத்தமாக 6 சேவைகளாக இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், தற்போது எந்தெந்த நேரங்களில் இந்த ரயிலை இயக்கலாம் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதற்காக வாட்ஸ் அப் எண்ணையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது (6374713251) ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
விரைவில் மின்சார பேருந்து சேவை: சிவசங்கர்

சென்னையில், வரும் ஜூன் மாதம் முதல் மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 20) செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையை தொடர்ந்து மதுரையிலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார். புதிய மின்சார பேருந்துகளை காண பயணிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.