News March 21, 2025

இறந்தவர்களின் உடலை தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம்

image

பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணிச்சியேந்தல் கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு ஊரின் நடுவே அமைந்துள்ள கால்வாயை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் செல்வதால் கிராம மக்கள் இறந்தவரின் உடல்களை தண்ணீர்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. முறையாக பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News March 29, 2025

பாம்பன் புதிய பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டுக – தேமுதிக

image

பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய செங்குத்து ரயில் பாலத்தை வருகிற ஏப்.06-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்து ராமேஸ்வரத்திற்கு அடையாளமாக இருக்கும் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரை புதிய ரயில் பாலத்திற்கு சூட்ட வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 29, 2025

அட இவங்க எல்லாம் இராம்நாடா.?

image

அப்துல் கலாம் – முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி. கமல்ஹாசன் – புகழ்பெற்ற நடிகர். விக்ரம் – புகழ்பெற்ற நடிகர். குலாம் ராசிக் – இலங்கை கிரிக்கெட் வீரர். வேல ராமமூர்த்தி – குணச்சித்திர நடிகர். ராஜ்கிரண் – பழம்பெரும் நடிகர். மாலினி ஜீவரத்தினம் – ஆவணப்பட இயக்குனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – அரசியல் மற்றும் ஆன்மீகவாதி. தியாகி இமானுவேல் சேகரன் – ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தலைவர்.

News March 29, 2025

429 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் இன்று (மார்ச்.23) காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் மக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!