News April 18, 2025
“இராம்நாட்” விமானம் பற்றி தெரியுமா?

ராஜ ராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதியின் ஆட்சியின்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார்.மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
Similar News
News May 8, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.08) வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் உள் பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், அபிராமம், நயினார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 7, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
News May 7, 2025
இறந்து அழுகிய நிலையில் கணவன் – மனைவி உடல்கள் மீட்பு

காட்டு பரமக்குடி மேலத்தெரு பகுதியில் உள்ள வீட்டில், இன்று இறந்து அழுகிய நிலையில் நாகசுப்பிரமணியன்(75) மற்றும் அவரது மனைவி தனலட்சுமி(70) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து ராமநாதபுரம் தடவியல் துறை போலீசார் உதவியுடன், பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.