News March 21, 2025
இராமேஸ்வரத்தில் ரூ.6.43 கோடியில் படகு தளம்

மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தில், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி கடல் வழி படகு பயணம் விரைவில் துவங்க உள்ளது. அக்னி தீர்த்த கடற்கரையில் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் படகு தளம் அமைய உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து தேவிபட்டினம், வில்லுாண்டி தீர்த்தம், தனுஷ்கோடி பகுதிக்கு கடல் வழி சுற்றுலா படகு சவாரி ஏற்படுத்தப்படுகிறது. படகு தளம், ‘டி’ வடிவில் 120 மீ., நீளம், 7.5 மீ., அகலம் 6 அடி உயரத்தில் அமையவுள்ளது. *ஷேர்
Similar News
News March 31, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (மார்ச்.30) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 30, 2025
ரம்ஜான் பண்டிகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்றுடன் (மார்ச்.30) நிறைவு அடைகிறது. அதனை எடுத்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான பிறை இன்று (மார்ச்.30) பார்க்கப்பட்டது. மேகம் தெளிவாக இருந்ததால் முதல் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி வெளியிட்டுள்ளார். எனவே நாளை (மார்ச்.31) இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ளனர்.
News March 30, 2025
ரூ.25 கோடியில் இயற்கை கால்பந்து புல்தரை மைதானம்

அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் இளைஞர் விளையாட்டு மைதானக்கள் ரூ.19 கோடியில் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். இதில் ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களில் சர்வதேச தரத்தில் செயற்கை தடகள் ஓடு பாதையுடன் இயற்கை கால்பந்து புல்தரை மைதானம் ரூ.25 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.