News April 13, 2025
இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE
Similar News
News April 17, 2025
ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ்

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை, இராமநாதபுரம் மாவட்ட ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த 30 ஊர் காவல்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ,IPS., இன்று (17-04-25) காலை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஊர் காவல்படை காவலர்கள் மகிழ்ச்சியுடன் சான்றிதழை பெற்றனர்.
News April 17, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய உதவி எண்கள்

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, ஆட்சியர் அலுவலகம் – 04567-230056,57,58, தீ தடுப்பு, பாதுகாப்பு-101, விபத்து அவசர வாகன உதவி – 102
மருத்துவ உதவி – 104, குழந்தைகள் பாதுகாப்பு – 1098
பேரிடர் கால உதவி – 1077, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993 ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம்.*ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
இராமநாதபுரத்தில் ரூ.5.5 கோடியில் புதிய திட்டம்

பொதுப்பணித்துறை(நீர்வளம்) அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், பார்த்திபனுார் நீர்த்தேக்கம் துவங்கி ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை வரை 78 கி.மீ., உள்ள ஆற்றின் இரு கரைகள், கால்வாய்க்குள் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்ட மதிப்பீடு தயார் செய்து (ரூ.5.5கோடி) பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அரசாணை வெளியான பிறகு இதற்கான வேலைகள் தொடங்கப்படும் என்றார். *ஷேர் பண்ணுங்க