News April 9, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 09/04/2025 ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News April 19, 2025

ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 19, 2025

தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது

image

கெலமங்கலம் அடுத்த கோவிந்தபள்ளியை சேர்ந்தவர் சரவணன் மனைவி அம்பிகா. தற்காலிக சத்துணவு சமையலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, தன் கணவர் சக்திவேலுவுக்கும், அம்பிகாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அஸ்வினி, கோவிந்தப்பள்ளி பகுதியில் வைத்து அம்பிகாவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.

News April 18, 2025

கிருஷ்ணகிரி ட்ரெக்கிங் பிரியர்களுக்கு சூப்பர் ஸ்பாட்

image

கிருஷ்ணகிரியில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது பிலிகுண்டுலு ராசிமணல் மலையேற்றம். தற்போது வனத்துறை மூலம் பிலிகுண்டுலுவில் தொடங்கி, ராசிமணல் வன முகாம் வரை ட்ரெக்கிங் அழைத்து செல்லப்படுகிறது. இயற்கை எழில் நிறைந்த பயணம் புதிய அனுபவம் தரும். இதற்கு trektamilnadu.com என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்து ட்ரெக்கிங் செல்லலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணி ட்ரெக்கிங் பிளான் பண்ணுங்க

error: Content is protected !!