News March 16, 2025

இந்திய – இலங்கை பாதுகாப்பில் நடந்த கச்சத்தீவு திருவிழா

image

இந்திய – இலங்கை கடற்படையினர் பாதுகாப்புடன் நடந்த கச்சத்தீவு சர்ச் விழாவில் இரு நாட்டை சேர்ந்த 7000 பேர் பங்கேற்றனர். இராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் விழா மார்ச்.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு சர்ச் வளாகத்தில் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை நடந்தது. சிங்கள மற்றும் தமிழ் மொழியில் பூஜை நடத்தினர். கொடி இறக்கியதும் விழா நேற்று நிறைவு பெற்றது.

Similar News

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

ராமநாதபுரத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

News March 17, 2025

கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

image

தொண்டி அருகே நம்புதாளையில் ராட்டினம் அமைத்த பகுதியில் கடந்தாண்டு நவ.1 அன்று பட்டப்பகலில் திருமணத்தை மீறிய உறவு காரணமாக சரவணன் உள்ளிட்டோர் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதில்  சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த கலைசெல்வனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் இருந்த அவரை நேற்று தொண்டி போலீசார் கைது செய்தனர்.

News March 17, 2025

ரத்தினக்கல் வழிப்பறி செய்த 7 பேர் கைது

image

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை முனியசாமி நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஜன.24 அன்று கீழக்கரை வந்த இவரிடம் காரில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் முனியசாமியை மிரட்டி ரூ.60 லட்சம் மதிப்புள்ள ரத்தினக்கல்லை பறித்துச் சென்றனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்து ரத்தினக்கல்லை பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!