News November 30, 2024
இதுதான் புயல் பாதிப்பை தடுக்கும் முறையா?

மழை-புயல்-வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ள அரசு பொதுவாக 4 வித நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒன்று, மழைநீர் வடிகால்களை அமைப்பது. இரண்டாவது, தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவது. மூன்றாவது, பெருமழையால் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுப்பது & மீட்புப்பணி. நான்காவது, தங்குமிடம், உணவு , பணம் உள்ளிட்ட உடனடி நிவாரணங்கள். ஆண்டுதோறும் இந்த காட்சி மாறுவதில்லை. இது நிரந்தர தீர்வாகுமா? அரசு என்ன செய்ய வேண்டும்?
Similar News
News April 27, 2025
பாக். ராணுவத்திடம் சிக்கிய வீரரின் நிலை என்ன?

தவறுதலாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமாரை ஒப்படைக்க பாக். ராணுவம் மறுத்து வருகிறது. கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாள்களாகியும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் பாக். விடாப்பிடியாக இருந்து வருகிறது. பூர்ணம் குமாரை மீட்க BSF பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பாக். தளபதி அளவிலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
News April 27, 2025
நடிகையா, சச்சின் மகளா? கில் கொடுத்த விளக்கம்

கடந்த 3 ஆண்டுகளாகவே சிங்கிளாக இருப்பதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சந்தித்தே இருக்காத பெண்களுடன் கூட தன்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவதாகவும், தன்னுடைய முழுக்கவனமும் தற்போது கிரிக்கெட்டில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சச்சின் மகள் சாரா மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோருடன் கில் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் பரவின.
News April 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 319 ▶குறள்: பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். ▶பொருள்: அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.