News May 11, 2024
ஆறுமுகநேரி அருகே நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம்?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி கமலாவதி பள்ளியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதில் தேர்வு எழுதிய 350 மாணவர்களுக்கும் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மறு தேர்வு நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
News April 19, 2025
தூத்துக்குடி:மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து இம்மாதம் 25ஆம் தேதி முதல் மே மாதம் 15-ஆம் தேதி வரை இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தடகளம் கைப்பந்து கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஹாக்கி மட்டும் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அணுக ஆட்சியர் இளாம்பகவத் இன்று கேட்டுள்ளார்.
News April 19, 2025
தூத்துக்குடி: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*