News September 13, 2024
ஆத்தூர் போலீஸ் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த நபரிடமிருந்து பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகியோரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
திருச்செந்தூர் பகுதிகளில் மின்தடை

திருச்செந்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 11) வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனால் வடக்கு ரத வீதி, மேல ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி மற்றும் உள் மாட வீதிகளிலும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருச்செந்தூர் உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.
News August 11, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 10, 2025
திருச்செந்தூர் அருகே அருமையான சுற்றுலா தலம் – அய்யனார் சுணை

திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவில் அய்யனர் சுணை அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று அருகில் அய்யனார் கோவில் உள்ளது. காடுகள் சூழ்ந்த இந்த இடம் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. விடுமுறை நாட்களில் இந்த பகுதிக்கு சென்றுவரலாம். உங்க நண்பர்களுக்கு இதை *SHARE* பண்ணுங்க.