News April 3, 2025

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோயில்

image

தேனியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கண்ணகி கோயில் எங்கு உள்ளது தெரியுமா? தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் பளியன்குடி என்னுமிடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோயில். இது கடல் மட்ட அளவிலிருந்து சுமார் 5000 கி.மீ உயரத்தில் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே இக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி. அன்று இங்கு கேரளா மற்றும் தமிழக மக்கள் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்வர்.

Similar News

News April 10, 2025

இன்றைய தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 10.04.2025 வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News April 10, 2025

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 10, 2025

தேனியில் நாளை கொட்டப் போகும் மழை 

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (ஏப்.11) கீழ்க்கண்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!