News April 5, 2025

ஆட்சியர் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 9, 2025

ஊசி செலுத்திய பெண் திடீர் மரணம்

image

சிவகாசி அருகே பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி மகேஸ்வரி (35). இவருக்கு நேற்று தலைவலி ஏற்பட்டதால் சிவகாசி பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது ஊசி செலுத்தியுள்ளனர். பின்னர் வீட்டில் வந்து தூங்கிய மகேஸ்வரிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2025

கந்துவட்டி கேட்டு வியாபாரிக்கு கொலை மிரட்டல்

image

ஏழாயிரம்பண்ணை அருகே கண்டியாபுரத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி ராசகுரு (27), அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரையிடம் ₹15,000 வட்டிக்கு பணம் பெற்று, சரிவர பணம் செலுத்தாததால், ராசகுருவின் இருசக்கர வாகனத்தை, செல்லத்துரை பறிமுதல் செய்துள்ளார். பின்னர், மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் செலுத்தக் கூறி கொலை மிரட்டல் விடுத்துளார். இதுகுறித்த புகாரில்பேரில் செல்லத்துரை மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 8, 2025

தண்ணீர் தொட்டியில் குடித்து, குளித்தும் மகிழ்ந்த யானைகள்

image

ஸ்ரீவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகள் அதிகம் வசிக்கும் 50 இடங்களில் நிரந்தர தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ரெங்கர் கோயில் பீட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் யானைகள் குட்டியுடன் குளிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வனம் மற்றும் சுற்றுகாலநிலை மாற்றம் துறைகூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!