News April 3, 2025

அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

image

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க 7790 019008 என்ற செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் நம்பரை 24 மணி நேரமும் வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வாயிலாக கோரிக்கை மூலம் தகவல் அனுப்பி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 8, 2025

தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

image

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அண்ணதானம் நடைபெறும்.

News August 8, 2025

தென்காசி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

image

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழா-2025 ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தாய்ப்பால் வார விழாவின் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

News August 8, 2025

தென்காசி அரசு மருத்துவமனைகளில் வேலை

image

தென்காசி மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ஆலோசகர் (யோகா & இயற்கை மருத்துவம்), உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி: 8th, B.Sc, Diploma ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்டு 20க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும். *SHARE*

error: Content is protected !!