News April 1, 2024
அரியலூர்: சட்டவிரோதமாக சிலிண்டர் விற்பனை

அரியலூர், ஆண்டிமடம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விளந்தை கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் அரசின் மானிய விலை சிலிண்டரில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு பயன்படும் பெரிய சிலிண்டர்களுக்கு சமையல் எரிவாயுவை நிரப்பி அப்பகுதியிலுள்ள கடைகள், மண்டபங்களுக்கு விற்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.
Similar News
News April 14, 2025
அரியலூரில் புத்தாண்டில் செல்ல வேண்டிய கோயில்கள்

அரியலூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் வழிபட வேண்டிய கோயில்கள். 1.திருமழப்பாடி வைத்தியநாதர் கோயில், 2.கங்கை கொண்ட சோழபுரம், 3. மேலப்பழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், 4. கோதண்டராமசுவாமி கோயில், 5. அங்கராயநல்லூர் அய்யனார் கோயில், 6. அழகாபுரம் அழகேசுவரர் கோயில், 7. காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோயில், 8. கீழையூர் இரட்டை கோயில்கள், 9. அயன்தத்தனூர் சோழீஸ்வரர் கோயில், 10. ஜமதக்னீஸ்வரர் கோயில்
News April 13, 2025
ஜெயங்கொண்டம்: அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் அருகே பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ந.சுகுமார் இயற்கை ஏய்தினார். அடைந்ததையடுத்து, நேற்று (ஏப்ரல்-12) ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் நேரில் சென்று சுகுமாரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
News April 13, 2025
அரியலூர்: பிரகதீஸ்வரர் கோயில்

அரியலூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.