News March 20, 2025
அரியலூரில் 8 வது புத்தகத் திருவிழா

அரியலூர் அருகே வாவஜாநகரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் எட்டாவது புத்தகத் திருவிழா இன்று தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
Similar News
News April 8, 2025
இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் அரியலூர் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
News April 7, 2025
அரியலூர்: 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Insurance Advisor) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 7, 2025
அரியலூரில் 83 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்

அரியலூர் நகரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒப்பில்லாத அம்மன் ஆலயத்தில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற உள்ளது. அதனையொட்டி திருத்தேரானது ஆலயத்திற்கு முன்பாக கொண்டுவரப்பட்டு வடக்கயிறு பொருத்தப்பட்டு வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள வெள்ளோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர்.