News October 25, 2024

அரசுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும்: ராமதாஸ்

image

வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, 600 மகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும். எனவே, பேருந்து கட்டணம் உயர வாய்ப்புள்ளது” என்றார்.

Similar News

News August 9, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை ஆய்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை (ம) நீர்வளத்துறை சார்பில் இன்று(ஆக.9) ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர்வளத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்டு வரும் அணைகள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சரின் அறிவிப்புகளில் திட்டங்கள் குறித்தும் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டறிந்தார்.

News August 9, 2025

விழுப்புரத்தில் பில்லி சூனியம் நீங்க இந்த கோயிலுக்கு போங்க!

image

விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டியில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலின் சிறப்பு தெரியுமா? இங்கு தேவி 72 அடி உயரத்தில் சிங்க முகத்துடனும், மனித உடலுடனும் காட்சியளிக்கிறாள். நரசிம்மரின் கோபத்தை தணிக்க சிவபெருமான் தனது நெற்றிக்கண் மூலம் தேவியை உருவாக்கியதாக புராணம் கூறுகிறது. தேவியின் தலத்தில் வழிபடும் பக்தர்களின் எதிர்மறை சக்திகளான பில்லி, சூனியம் போன்றவை நீங்குவதாக நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

விழுப்புரத்தில் போலி பணி நியமன ஆணை வழங்கிய 3 பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 3 பேர் போலி பணி நியமன ஆணை வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் நாகர்கோவில் பல்கலைக்கழக கல்லூரிக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியதாக திண்டிவனத்தை சேர்ந்த செல்வக்குமார்(50), முகமது இஸ்மாயில்(51), பாபு(42) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி அரசு பணி நியமன ஆணை, அரசாங்க முத்திரைகள், கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!