News March 23, 2025

அதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

image

அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது39). கொத்தனார். நேற்று இவர் கீழத்தெருவில் புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த ஒயரில் அவருடைய கை எதிர்பாராவிதமாக பட் டது. இதில் மின்சாரம் பாய்ந்து, செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்தில் இறந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 14, 2025

தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்செரிக்கையாக இருங்கள்!

News April 13, 2025

தஞ்சையில் முருகனுக்கு அறுபடை வீடு இருக்கு! தெரியுமா?

image

தஞ்சையில் உள்ள முருகனின் அறுபடை வீடு, முதல் படைவீடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், அலங்கம். இரண்டாம் படைவீடு: சுப்பிரயமணிய சாமி கோயில், பூக்கார தெரு. மூன்றாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில் சின்ன அரிசிக்கார தெரு. நான்காம் படைவீடு: சுவாமிநாத சுவாமி கோயில், ஆட்டுமந்தை தெரு. ஐந்தாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில், குறிச்சி தெரு கீழவாசல். ஆறாம் படைவீடு: பால தண்டாயுதபாணி சுவாமி கோயில், வடக்கு அலங்கம்.

News April 13, 2025

தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்

image

தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்தந்த கோட்டத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டை திருத்தம், பெயர் மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!