News March 25, 2025
அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் பலி

திருவண்ணாமலை தெள்ளார் பகுதி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (55). கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச்.24) அதிகமான மாத்திரைகளை உண்டு சுருண்டு விழுந்துள்ளார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெள்ளார் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 12, 2025
இரவு ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News April 11, 2025
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தங்க ஆபரணம் வழங்கல்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவண்ணாமலை குமரகோவில் தெருவை சேர்ந்த சண்முகா உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சா.குமார் குடும்பத்தின் சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 750 கிராம் பச்சைக்கல், வைரக்கல் போன்றவை பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
News April 11, 2025
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்

▶மாவட்ட ஆட்சியர் – 04175233333 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 04175-233026 ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 9445000905 ▶இணை வேளாண் இயக்குனர் – 9842692807 ▶திருவண்ணாமலை கோட்ட ஆட்சியர் – 04175252432 ▶சுகாதார துணை இயக்குனர் – 04175-232474 ▶பேரிடர் மேலாண்மை – 9442254997 ▶மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் – 9443228879 ▶மாவட்ட கல்வி அலுவலகம் – 8012599388 ▶மாவட்ட பதிவாளர் அலுவலகம் – 8300820153