News March 14, 2025

அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி

image

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 14, 2025

காஞ்சிபுரம்: ரூ.120 கோடியில் மருத்துவமனை தரம் உயர்த்தல்

image

தமிழகத்தின், 2025 – 26ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று(மார்.14) தாக்கல் செய்யப்ட்டு வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையை தரம் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

தனிநபர் வருமானத்தில் காஞ்சிபுரம் இரண்டாம் இடம்

image

தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று(மார்.13)  வெளியிட்டார். இதில் கடந்த 2024 – 25ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 5.97 லட்சம் கோடி ரூபாய். மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதன்மையானதாக செங்கல்பட்டு மாவட்டம் தனி நபர் வருமானத்தில் 6,47,962 ரூபாயில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் 6,47,474 ரூபாய்; சென்னை மாவட்டம் 5,19,941 ரூபாய் என முறையே 2,3 இடத்தை பிடித்துள்ளது

News March 14, 2025

பட்ஜெட்: தோழி’ மகளிர் விடுதிகள் கட்டப்படும்

image

2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தோழி’ மகளிர் விடுதிகள் கட்டப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன் மூலம் படிக்கும் மற்றும் வேலை செய்யும் பெண்கள் பயன் அடைவார்கள்.

error: Content is protected !!