News May 22, 2024

அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆட்சியர் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2025

கன்னியாகுமரியின் சிறந்த கோயில்கள் & வழிபாட்டு நேரம்

image

1. குமாரி அம்மன் கோவில்
காலை 4.30 – 12.00 மற்றும் மாலை 4.30 – இரவு 8.00

2.ஆதிகேசவப் பெருமாள் கோவில்,திருவட்டார்
காலை 6.00 – 11.00 & மாலை 5.00 – 8.00

3.திருநந்திக்கரை குகைக் கோயில்,திருவட்டாறு
காலை 5:00 – 11:00 & மாலை 5:00 – இரவு 8:00

4.நாகராஜா கோவில்,கன்னியாகுமரி
காலை 4.00 – 12.00 & மாலை 5.00 – 8.30

5.தாணுமாலயன் கோவில்,சுசீந்திரம்
காலை 4.30 – 12.30 & மாலை 4.30 – 8.30

*ஷேர் பண்ணுங்க

News April 20, 2025

குமரி : காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் 2500 முதல் 3500 வரை ரூபாய் விலக்கு அளிக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மேலும் தகவல் பெற அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்லலாம் என அறிவிப்பு.

News April 20, 2025

குமரி: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி பணிமனையில் 139 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!