News March 29, 2024
அசோக் நகரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபமாகவே பள்ளி மற்றும் கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
Similar News
News April 21, 2025
மாணவிக்கு கருக்கலைப்பு: பேராசிரியர் கைது

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கருக்கலைப்பின்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 21, 2025
சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜி என்கிற தொண்டைராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் மாமியார் வீட்டுக்குச் சென்றபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. ராஜன் கடந்த மாதம் சிறையில் இருந்து வந்தவர் என்றும், முன்விரோதம் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
News April 20, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (20.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*