News March 30, 2024
சோதனை மேல் சோதனையை சந்திக்கும் ராசியினர்

கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது ஏப்ரல் மாதம் முழுவதும் சனி பகவான் உச்சபட்ச கோபத்தில் இருக்கிறார். இதனால் தனுசு, சிம்மம், கன்னி, துலாம் ராசியினர் சோதனை மேல் சோதனையை அனுபவிக்கப் போகின்றனர். குறிப்பாக பணம் கிடைப்பதில் பிரச்னை, கொடுத்த பணத்தை கேட்டால் தகராறு, வழக்குகளில் சாதகமற்ற சூழல், வீண் வம்பு, சண்டை, சச்சரவு, தொல்லை, சிக்கல் என பலகட்ட சோதனைகள் மேற்கண்ட ராசியினரை வாட்டி வதைக்கப் போகிறது.
Similar News
News October 30, 2025
திருப்பதி சால்வை கொள்முதலில் முறைகேடா?

திருப்பதி கோயிலுக்கு வரும் VVIP-களுக்கு சால்வை அணிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்த சால்வை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹400 மதிப்புள்ள சால்வையை ₹1,300-க்கு வாங்கியதாக கணக்கு காட்டி, ₹50 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடத்த, கோயில் அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.
News October 30, 2025
விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

கரூர் துயருக்கு பிறகு, அதிமுக, பாஜக கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், NDA-வில் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் NDA கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார். இது விஜய்யுடனான கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது.
News October 30, 2025
விஜய்யை நெப்போலியன் எதிர்ப்பதற்கு காரணம் இதுவா?

‘போக்கிரி’ பட ஷூட்டிங்கில், விஜய்யை சந்திக்கச் சென்றுள்ளார் நெப்போலியன். அப்போது காத்திருக்க சொன்ன விஜய்யின் உதவியாளர்களை நெப்போலியன் திட்ட, கேரவனிலிருந்து வெளியே வந்த விஜய், அங்கிருந்த பலரது முன்னிலையிலேயே தனது உதவியாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனாலேயே நெப்போலியனுடனான நட்பு கசப்பாகியுள்ளது. இதை மனதில் வைத்தே, ஒரு Ex அரசியல்வாதியாக நெப்போலியன், விஜய்யை விமர்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


