News March 4, 2025
டிரம்ப் அவமானப்படுத்திய பிறகும் ஜெலன்ஸ்கி உறுதி

டிரம்ப் நிர்வாகத்துடன் சுமூகமான உறவை பேண முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். USA எதிர்பார்க்கும் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாகவும், ஆனால் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை அந்நாட்டு வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவது கடினம் என்பதால், தன்னை பதவியில் இருந்து நீக்குவதும் கடினம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2025
இவரா அந்த பாலியல் குற்றவாளி?

மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சிவசேனா கட்சி (ஷிண்டே) நிர்வாகி பியூஷ் எனத் தெரியவந்துள்ளது. இவரது தலைமையிலான குழுவே, அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. பியூஷ் முன்னதாக பாஜக நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் மொத்தம் 7 பேர் மீது போக்சோ பாய்ந்துள்ளது.
News March 4, 2025
ஃபைனல் செல்லுமா இந்தியா?

இந்தியா- ஆஸி. அணிகளுக்கு இடையிலான CT தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. மதியம் 2.30 மணிக்கு துபாயில் போட்டி தொடங்குகிறது. உலகக்கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸி.யை பழிதீர்க்க இந்தியா எதிர்பார்த்து இருக்கிறது. அதேபோல், இந்த போட்டியை வென்று, ஃபைனலுக்குச் செல்ல ஆஸி. அணியும் முனைப்பு காட்டுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது.
News March 4, 2025
ஆரியர்கள் ஆசிரியர்களைப் போன்றவர்கள்: ஆளுநர்

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற நச்சு கருத்தை ஈவெரா திணிக்க முயற்சித்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரியர்கள் என்பவர் ஆசிரியர்களை போன்றவர்கள் என்றும், கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் எனவும், அது அமைதி, ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.