News June 10, 2024
பந்தயம் கட்டிய ஒய்எஸ்ஆர் காங்., நிர்வாகி மர்ம மரணம்

ஆந்திராவில் ஜெகன் மோகன் மீண்டும் முதல்வராவார் என ₹30 கோடி பந்தயம் கட்டிய ஒய்எஸ்ஆர் காங்., நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விஜயவாடாவை சேர்ந்த வேணு கோபால், பந்தயம் கட்டி தோற்ற நிலையில், அவரது வீட்டில் இருந்த பொருட்களை பந்தயம் கட்டியவர்கள் எடுத்துச் சென்றதை அடுத்து, மறுநாள் மாந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடும் நிதி நெருக்கடியில் அவர் கிராமத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 4, 2025
நாளை முதல் ரீசார்ஜ் ஆஃபர்களை அள்ளித்தரும் JIO!

9-வது ஆண்டை நிறைவு செய்யும் வேளையில், ஜியோ பல சலுகைகளை அறிவித்துள்ளது.
*அதன்படி, செப். 5- 7 வரை 5G ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு 5G டேட்டா முழுவதும் இலவசம்.
*4G ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ₹39 Data add-on உடன் அன்லிமிடெட் 4G வழங்கப்படுகிறது.
*அதே போல, செப் 5- அக். 5 வரைக்கான, ₹349 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அன்லிமிடெட் 5G வழங்கப்படுகிறது. இத்துடன், ஜியோஹாட்ஸ்டார் 1 மாத இலவச சந்தாவும் அளிக்கப்படுகிறது.
News September 4, 2025
சிறப்பு TET தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டம்?

<<17579658>>உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி <<>>பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு TET தேர்வு நடத்துவதற்கு, தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான பள்ளிக் கல்வித்துறை கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதேநேரம், ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
News September 4, 2025
திமுகவை அசைக்க முடியாது: அமித்ஷாவுக்கு வைகோ பதிலடி

திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று சமீபத்தில் அமித்ஷா கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய வைகோ, இமயமலையை கூட அமித்ஷா அசைத்துவிடலாம், ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். எண்ணற்ற பேர் தன் உயிர்களையும், ரத்தத்தையும் சிந்தியுள்ள திமுகவை இவ்வாறு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.