News March 31, 2025
₹500-க்காக இளைஞர் குத்திக்கொலை!

பணம் மனிதனை மிருகமாக்கும் என்ற சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. நியூ உஸ்மான்பூரில் உள்ள பூங்காவில் அமர்ந்திருந்த தில்ஷித் என்ற நபரிடம் 2 சிறுவர்கள் உட்பட மூவர் பணம் பறிக்க முயன்றனர். தன்னிடம் இருந்த ₹500 தரமறுத்து அவர்களுடன் தில்ஷித் மல்லுக்கட்ட, திடீரென கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். தப்பியோடிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Similar News
News January 20, 2026
சோஷியல் மீடியாவை அலற வைக்கும் அசின் போட்டோஸ்!

பல ஆண்டுகளாக மீடியா கண்ணில் படாமல் இருந்த அசின், தற்போது வைரலாகியுள்ளார். தங்களது 10-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கணவர் ராகுல், அசினின் போட்டோஸுடன் வாழ்த்துகளை பதிவிட அது ரசிகர்களை ஆரவாரத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘10-ம் ஆண்டு வாழ்த்துக்கள், என் அன்பே. வாழ்க்கையில் உன் Co-star-ஆக இருப்பது அதிர்ஷ்டம்’ எனவும் ராகுல் பதிவிட்டுள்ளார். 2016-ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
News January 20, 2026
சற்றுமுன்: பணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை & டிட்வா புயல் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ₹1,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பிப்.1 முதல் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.
News January 20, 2026
திட்டமிட்டு TN-ல் போதை பொருள் சப்ளை: விசிக

போதைக்கு எதிராக அனைவரும் கிளர்ந்தெழ வேண்டிய காலம் இது என விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய பண்பாட்டு யுத்தமாக மாறியுள்ளதாக கூறிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தை நோக்கி திட்டமிட்டு போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது என்றார். மேலும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


