News March 28, 2025
நடுவானில் பறந்த விமானத்தில் ஆபாசம்: இளைஞர் கைது

விமானம் நடுவானில் பறந்தபோது இரு பெண்கள் முன்பு பேண்ட்டுக்குள் கையை விட்டு ஆபாச செயலில் ஈடுபட்ட 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து டிரெஸ்டனுக்கு சென்ற விமானத்தில் இரு பெண் பயணிகளுக்கு அருகே அமர்ந்திருந்த அந்த நபரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் கூறியதால், நடுவானில் களேபரம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்நபர் டிரெஸ்டன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
Similar News
News November 26, 2025
ஆன்லைனில் ஆடை trial பார்க்கும் சூப்பர் App

இனி ஆன்லைனில் ஆர்டர் செய்த ஆடை நமக்கு பிட் ஆகுமா என்ற கவலையே வேண்டாம். ‘Google Doppl’ AI ஆப் மூலம், ஆடை பிட் ஆகுமா இருக்குமா என்பதை அணியாமலேயே அறிய முடியும். உங்களுக்கு பிடித்த ஆடைகளை இந்த ஆப்பில் அப்லோட் செய்தாலே, அதை உங்களுக்கு அணிவித்து காட்டும். இதை வைத்து நாம் ஆடைகளை ஈஸியாக செலக்ட் செய்யலாம். தற்போது USA-ல் சோதனையில் உள்ள இச்செயலி, விரைவில் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
News November 26, 2025
ஓபிஎஸ், டிடிவி தினகரனின் பிளான் தோல்வியா?

அதிமுக ஒருங்கிணைப்பு என்ற திட்டத்திலிருந்து செங்கோட்டையன் பின் வாங்கியதன் விளைவே மாற்றுக் கட்சியில் இணையும் முடிவு. தவெகவா (அ) திமுகவா என்பதை மட்டுமே அவர் இன்னும் இறுதி செய்யவில்லை. இதுவொருபுறம் இருக்க, அதிமுக ஒருங்கிணைப்பு என செங்கோட்டையன் வாயிலாக காய்நகர்த்தி வந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனின் முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News November 26, 2025
ALERT: 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், நவ.29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த RED ALERT-யை X தளத்தில் இருந்து IMD நீக்கியுள்ளது. அதேநேரம், நவ.29-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது.


