News October 24, 2024

வேப்பூரில் சிறுவனை தாக்கிய இளம்பெண் கைது

image

வேப்பூர் அடுத்த மாளிகைமேட்டை சேர்ந்தவர் செல்வம் மகன் அஸ்வின் (14). செல்வம் குடும்பத்துக்கும், பக்கத்தில் வசிக்கும் வெங்கடேசன் மனைவி பிரியா(23) குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது. இந்த விரோதம் காரணமாக பிரியா, அஸ்வினை உருட்டுகட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஸ்வின், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிந்து பிரியாவை கைது செய்தனர்.

Similar News

News November 4, 2025

கடலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 4, 2025

கடலூர்: வாக்காளர்களுக்கு சிறப்பு எண்கள் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிஞ்சிப்பாடி 04142-258901, புவனகிரி 04144-240299, சிதம்பரம் 04144-227866, காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி- 04144-262053 என்ற எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

News November 4, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளான வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (04.11.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை ஆட்சியர் பயிற்சி டியூக் பார்க்கர் உட்பட பலர் உள்ளனர்.

error: Content is protected !!