News April 7, 2025

செல்போன் பயன்படுத்தும் இளம்பெண்களே உஷார்…!

image

மனித வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்ட செல்போன்களால் இளைஞர்களை விட இளம் பெண்களுக்கே ஆபத்து அதிகமாம். ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட் போன்களால் இளம்பெண்களின் மனநலம் பாதிக்கப்படவும், தற்கொலை எண்ணம் அதிகரிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் சற்று கூடுதல் கவனத்துடன் செல்போனை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர். உஷாரா இருக்க லேடீஸ்!

Similar News

News November 22, 2025

USA-ன் திட்டம் அமைதிக்கான அஸ்திவாரம்: புடின்

image

அமெரிக்காவின் <<18355051>>போர் நிறுத்த திட்டம்<<>>, உக்ரைனில் அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்கும் என புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தங்களுடன் ஆலோசிக்கவில்லை என்றாலும், 28 நிபந்தனைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த அமைதி திட்டத்தை உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் முன்னேறுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

மாதம் ₹3,000 கொடுக்கும் அரசு.. உடனே அப்ளை பண்ணுங்க

image

வீட்டு வேலை, கட்டட வேலை, விவசாய கூலி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களது 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 ஓய்வூதியம் பெற முடியும். இதற்கு மத்திய அரசின் <>eshram.gov.in<<>> இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலே உள்ள லிங்கிற்கு சென்று உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை உள்ளிட்டு, பெயர், முகவரியை பதிவு செய்து e-SHRAM ஐடி கார்டை பெறுங்கள்.

News November 22, 2025

இன்று 13 மாவட்டங்களில் கனமழை

image

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளையும், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

error: Content is protected !!