News April 7, 2025
செல்போன் பயன்படுத்தும் இளம்பெண்களே உஷார்…!

மனித வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்ட செல்போன்களால் இளைஞர்களை விட இளம் பெண்களுக்கே ஆபத்து அதிகமாம். ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட் போன்களால் இளம்பெண்களின் மனநலம் பாதிக்கப்படவும், தற்கொலை எண்ணம் அதிகரிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் சற்று கூடுதல் கவனத்துடன் செல்போனை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர். உஷாரா இருக்க லேடீஸ்!
Similar News
News April 8, 2025
கவர்னர் பதவி விலகக் கோரி வலுக்கும் குரல்கள்!

வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
News April 8, 2025
பிரபல நடனக் கலைஞர் ராம் சஹாய் பாண்டே காலமானார்

பிரபல நடனக் கலைஞர் ராம் சஹாய் பாண்டே(92) உடல் நலக்குறைவால் காலமானார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இவர் 18 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற நடன நிகழ்ச்சிகளை நடத்தி இந்தியாவின் பெருமையை உலகறிய செய்தவர். இவரது கலைச் சேவையைப் பாராட்டிக் கடந்த 2022-ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ராம் சஹாய் மறைவுக்கு மத்தியப் பிரதேச CM உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News April 8, 2025
சிமெண்ட் விலை உயர வாய்ப்பு!

சிமெண்ட் விலை இம்மாதம் உயர வாய்ப்புள்ளதாக நுவாமா வெல்த் (Nuvama Wealth) நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு தொடக்கத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிமெண்ட் விலை சற்று உயர்ந்த நிலையில், கிழக்கு மாநிலங்களில் கடந்த மாதம் மூட்டைக்கு ₹5 – ₹7 வரை குறைந்தது. இந்நிலையில், செலவின அதிகரிப்பு காரணமாக மீண்டும் இம்மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ₹20 வரை உயர வாய்ப்புள்ளதாக நுவாமா கணித்துள்ளது.