News March 26, 2025
கத்தி முனையில் இளம்பெண் பலாத்காரம்

கடலூர் அருகே திருமணமான 29 வயது பெண் கத்திமுனையில் மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய சிவக்குமார், அதனை வீடியோ பதிவு செய்து தனது நண்பர் வினோத்திற்கும் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டிய வினோத், அப்பெண்ணை பலாத்காரம் செய்ததோடு ₹50,000, 3 சவரன் நகையை பறித்துள்ளார். மேலும், பணம் கேட்டு மிரட்டியதால் கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் அந்தப்பெண் புகார் கொடுத்துள்ளார்.
Similar News
News March 29, 2025
வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ரம்ஜான் தினமான மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி கணக்குகள் முடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதே தினத்தில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு கணக்குகளை முடிக்க வேண்டும் என்று RBI உத்தரவிட்டுள்ளது.
News March 29, 2025
நீங்க எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?

இப்போதெல்லாம் காலை கண் விழிப்பதே போனின் அலாரம் சத்தம் கேட்டு தான். கையுடன் போனை ஒட்டிவைத்தது போல ஆகிவிட்டது நிலைமை. ஒரு இந்தியர், சராசரியாக ஒரு நாளில் 5 மணி நேரம் வரை போனை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் 1.1 லட்ச கோடி மணி நேரத்தை போனை பார்த்து செலவழித்திருப்பதாக கூறப்படுகிறது. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?
News March 29, 2025
இன்னும் ஒரு மணி நேரத்தில் ‘GBU’வின் மாஸ் அப்டேட்!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், உருவாகி வருகிறது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’. படத்தின் Second Single ப்ரோமோ இன்று மாலை 5:50 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பவே ரசிகர்கள் இது என்ன மாதிரி பாட்டா இருக்கும் தெரியலையே என ஆர்வத்துடன் உள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.