News August 7, 2025

இளம் பெண் தற்கொலை.. கணவர் குடும்பத்தோடு கைது

image

திருப்பூரில் ரிதன்யாவை போல் வரதட்சணை கொடுமையால் திருமணமான 11 மாதங்களில் பிரீத்தி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணையாக 120 பவுன் நகை, ₹25 லட்சம் ரொக்கம், சொகுசு கார் கொடுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ₹50 லட்சம் கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்துள்ளனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரின் குடும்பத்தை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 3, 2026

அமித் ஷா கேட்டும் அசையாத EPS

image

ராஜ்பசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார் EPS. இதில் தொகுதி பங்கீட்டை விட ராஜ்யசபா சீட் பற்றி தான் நீண்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. குறிப்பாக கூட்டணியில் உள்ள GK வாசனுக்கு மறுபடியும் ராஜ்யசபா சீட் கொடுக்கும்படி அமித்ஷா கேட்டாராம். அதற்கு மறுப்பு தெரிவித்த EPS, அன்புமணி மற்றும் அதிமுகவே 2 சீட் என உறுதியாக கூறிவிட்டாராம்.

News March 3, 2026

விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி

image

இண்டிகோ நிறுவன விமான பணிப்பெண்ணிடம் திமுக நிர்வாகி பாலியல் ரீதியில் அத்துமீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25-ம் தேதி, சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் வைத்து 25 வயது பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் பிரபாகரனும் அவரது நண்பரும் அத்துமீறியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

News March 3, 2026

பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா?

image

இஸ்ரேல், US-ன் தாக்குதலை அடுத்து ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாகவே இந்தியாவுக்கு 40% கச்சா எண்ணெயும், 60% LPG-யும் கப்பலில் வருகின்றன. இந்நிலையில் ஈரானின் தடையால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அச்சம் எழுந்தது. எனினும் அடுத்த 25 நாள்களுக்கு கச்சா எண்ணெய் & 30 நாள்களுக்கான LPG-யும் கையிருப்பில் உள்ளதால், பெட்ரோல் டீசல் விலை உயராது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!