News March 29, 2025
போதைக்கு அடிமையாகி Suicide செய்யும் இளைஞர்கள்

மாநிலத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பல ஆண்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர். குறிப்பாக, வயது வித்தியாசம் இல்லாமல் குடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக மன நல மருத்துவ சங்கத்தின் EX தலைவர் பன்னீர் செல்வம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
Similar News
News April 1, 2025
வலி என்றால் என்னவென்று காட்டுவேன்: டிரம்ப் வார்னிங்

USA கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், ஹவுதி குழுவுக்கும், ஈரானுக்கும் வலி என்றால் என்னவென்று காட்டுவேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 2 வாரமாக நடந்து வரும் ஹவுதிக்கு எதிரான தாக்குதல் வெறும் சாம்பிள் தான் எனவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கியது முதல் இதுவரை 300க்கும் மேற்பட்ட முறை USA கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
News April 1, 2025
வணிக சிலிண்டர் விலை குறைந்தது

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையிலான சிலிண்டர் விலை ₹43.50 குறைந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்று வந்த வர்த்தக சிலிண்டர் விலை ₹1,921.50ஆக குறைந்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. GAS விலை மாற்றம் குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News April 1, 2025
இன்று ‘ஏப்ரல் Fool தினம்’ ஏன் தெரியுமா?

உலகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்.1 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போதைய போப் கிரகோரி 8, ஜன.1ஐ புத்தாண்டாக அறிவித்தார். இதை அறியாத ஃபிரான்ஸ் மக்கள், ஏப்.1ஐ புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். இதை அறிந்த மற்ற பகுதி மக்கள், ஃபிரான்ஸ் மக்களை கிண்டலடித்து Fun செய்தனர். அப்போது முதல் ஏப்.1 உலக முட்டாள்கள் தினமானது.