News May 6, 2024
அஜாக்கிரதையால் பலியாகும் இளைஞர்கள்

நண்பர்களோடு சுற்றுலாச் செல்லும் இளைஞர்கள், அஜாக்கிரதையால் பலியாவது சமூக ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது. விடுமுறை தினத்தைக் கழிக்க, கொண்டாட்ட மனநிலையோடு நீர்நிலைகளில் குளிக்கும் அவர்கள், விளையாட்டாக ஆழமான பகுதிகளுக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், இளைஞர்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 28, 2026
திருவாரூர்: வாகன சோதனையில் ரூ.1.70 லட்சம் பறிமுதல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ல் நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து, தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர். அதன்படி நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் பறக்கும் படை அதிகாரி சிவராமன் தலைமையில் நடந்த வாகன சோதனையில், பாபநாசத்தைச் சேர்ந்த திவாகர் என்பவரிடம் இருந்து உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
News March 28, 2026
வில் அம்புடன் காட்சி தரும் முருகன்.. அதிசய கோயில்!

முருகன் என்றாலே, வேலுடன் காட்சி தருவார்.. இதுவே நினைவுக்கு வரும். ஆனால், கைகளில் வேலுடன், வில் அம்பை ஏந்தியபடி இருக்கும் முருகனை திருவையாறு ஐயாறப்பர் கோயில் காணலாம். 4 கைகளுடன் வேல், வில் & அம்பு தாங்கி, தீய சக்திகளை அழித்து பக்தர்களைக் காக்கும் கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார். சிவபெருமான் வழங்கிய கண்டாமணியை வலது காலில் அணிந்து போர் வீரத்தை குறிக்கும் வகையில் முருகன் அருள்பாலிக்கிறார்.
News March 28, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் $110 உயர்ந்து $4,493-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $1.94 உயர்ந்து $69.77-க்கு வர்த்தகமாகிறது. இதன் எதிரொலியால் இன்று இந்திய சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


