News May 16, 2024

இலங்கையிலும் இனி Phonepe பயன்படுத்தலாம்

image

இந்தியாவின் Fintech நிறுவனமான Phonepe UPI, இலங்கையில் தனது கிளையை தொடங்கியுள்ளது. Phonepe நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால், பயனர்கள் இனி QR code பயன்படுத்தி UPI பரிவர்த்தனை செய்ய முடியும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News

News November 2, 2025

என்ன சொல்றீங்க.. இறந்துடுமா?

image

சில உயிரினங்கள் வாழ்நாள் மிகவும் குறுகிய காலம் மட்டுமே. குறிப்பாக சில பூச்சி வகைகள், மீன்கள், எலி வகைகள் உள்ளிட்டவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இறந்துவிடும். அவை எந்த உயிரினங்கள், எப்போது இறக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உயிரினங்கள் தொடர்பான சுவாரசியமான தகவலை, கமெண்ட்ல சொல்லுங்க.

News November 2, 2025

ரஷ்மிகாவுக்கு கதையை பரிந்துரைத்த சமந்தா

image

ரஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘The Girlfriend’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் கதையை, தனது தோழியான நடிகை சமந்தாவிடம் படிக்க கொடுத்துள்ளார், இதன் இயக்குநர் ராகுல் ரவீந்திரன். அப்போது, இப்படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க ராகுல் திட்டமிட்டுள்ளார். ஆனால் சமந்தாவோ, இக்கதை தனக்கு பொருந்தாது, ரஷ்மிகாவை நடிக்க வையுங்கள் என கூறியுள்ளார். இதன் பிறகே ரஷ்மிகா படத்தில் கமிட்டாகியுள்ளார்.

News November 2, 2025

தமிழை பற்றி பேசும் தகுதி மோடிக்கே உண்டு: நயினார்

image

தமிழை பற்றி பேசும் தகுதி PM மோடி ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஐநா சபைக்கு போனாலும் சரி, அயோத்திக்கு போனாலும் சரி தமிழை பற்றி மட்டுமே மோடி பேசுவதாகவும் கூறியுள்ளார். பிஹாரிகளை திமுக அரசு துன்புறுத்துவதாக மோடி கூறிய நிலையில், இது தமிழர்களை அவமதிக்கும் செயல் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

error: Content is protected !!