News May 16, 2024
இலங்கையிலும் இனி Phonepe பயன்படுத்தலாம்

இந்தியாவின் Fintech நிறுவனமான Phonepe UPI, இலங்கையில் தனது கிளையை தொடங்கியுள்ளது. Phonepe நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால், பயனர்கள் இனி QR code பயன்படுத்தி UPI பரிவர்த்தனை செய்ய முடியும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News September 18, 2025
இந்த ஊர்களுக்கு போங்க

பிரபலமான சுற்றுலா தளங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் பலரும் அமைதியான இடங்களை தேடி கண்டுபிடித்து கொண்டாடி வருகின்றனர். அதுமாதிரியான இயற்கையின் ரம்மியம் நிறைந்த சில இடங்களை உங்களுக்காக மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அந்த இயற்கை அழகில் தொலைந்துபோக ஸ்வைப் பண்ணுங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த அருமையாக ஸ்பாட்டை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
வாக்கு திருட்டு தகவல்களை ராகுலுக்கு கொடுப்பது யார்?

வாக்கு திருட்டு தொடர்பான தரவுகளை திரட்ட தேர்தல் ஆணையத்திலிருந்தே உதவிபெற்று வருவதாக கூறியுள்ளார் ராகுல் காந்தி. வாக்கு திருட்டு குறித்து முதல்முறையாக குற்றம்சாட்டும் போது இந்த உதவி கிடைக்கவில்லை என தெரிவித்த அவர், இனி இந்த தகவல்கள் கிடைப்பதை யாராலும் தடுக்கமுடியாது என கூறியுள்ளார். இதனால் தேர்தல் ஆணையத்திலிருந்தே யார் இந்த தகவலை பரப்புவது என்ற குழப்பம் EC-ல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
News September 18, 2025
உங்களுக்கு தான் போன், போனுக்காக நீங்கள் இல்லை

இன்றைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட்போனை தவிர்க்க முடியாது என்பது உண்மை தான். ஆனால், பலருக்கும் அது இல்லாமல் கொஞ்ச நேரம் கூட இருக்க முடிவதில்லை. எப்போதும் போனுடன் இருந்தால் *வேலையில் கவனச் சிதறல் *மனச்சோர்வு *தூக்கம் பாதிப்பு *படிப்பு பாதிப்பு *சக மனிதர்களுடன் பேசுவது குறைந்து போதல் *குடும்ப உறவுகளில் சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். SHARE IT