News May 16, 2024

இலங்கையிலும் இனி Phonepe பயன்படுத்தலாம்

image

இந்தியாவின் Fintech நிறுவனமான Phonepe UPI, இலங்கையில் தனது கிளையை தொடங்கியுள்ளது. Phonepe நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால், பயனர்கள் இனி QR code பயன்படுத்தி UPI பரிவர்த்தனை செய்ய முடியும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News

News December 13, 2025

கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

image

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த கணேசன் என்பவர், சூளகிரி அருகே உள்ள பொன்னால் நத்தம் என்று ஊரில் தனியார் கிரஷர் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். நேற்று (டிச.12 ) இரவு தனது ஊரிலிருந்து வேலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்போது, எரண்டபள்ளி கிராமம் அருகே சாலையில் அதிவேகமாக வந்ததால் நிலை தடுமாறி ஒரு வீட்டின் மதில் சுவரில் இடித்து விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

News December 13, 2025

ரீ-ரிலீஸில் கில்லியை ஓரங்கட்டிய படையப்பா!

image

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ‘படையப்பா’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளில் கிட்டத்தட்ட ₹4.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், ரீ-ரிலீஸில் முதல் நாளில் அதிகம் வசூல் படம் என்ற பெருமையையும் ‘படையப்பா’ பெற்றுள்ளது. முன்னதாக, விஜய்யின் ‘கில்லி’ ₹3.1 கோடி வரை வசூலித்திருந்ததே ரெக்கார்டாக இருந்தது.

News December 13, 2025

TN-ல் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா? R.S.பாரதி

image

அதிமுகவினர் திமுகவுக்கு போவார்களா, நடிகர் கட்சிக்கு போவார்களா என்ற குழப்பத்தில் EPS இருப்பதாக R.S.பாரதி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக 8 முறை PM மோடி, தமிழகம் வந்தும் எதுவும் எடுபடவில்லை; அதேபோல், அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்று கூறிய அவர், SIR நடவடிக்கையால் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!