News June 24, 2024
வாகன எண்ணுடன் புகார் அளிக்கலாம். – எஸ்.பி.

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் தொடர்ந்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம் பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருந்தால் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்கு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் எச்சரித்தார். பைக் சாகசம் செய்பவர் வாகன எண்ணுடன் எஸ்பி அலுவலக எண் 04652 220167 அல்லது 100 ஐ அழைத்து பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என கூறினார்.
Similar News
News November 8, 2025
குமரியில் மீனவர்கள் கவலை

குளச்சல் பகுதியில் 300 விசைபடகுகளும், 1000க்கும் மேல் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. நேற்று மீனவர்கள் வலையில் அதிக அளவில் சாளை மீன்கள் சிக்கின. அவற்றை குளச்சல் ஏல கூடத்தில் ஏலமிட்டபோது ஒரு குட்டை சாளை மீன் ரூ.700 முதல் ரூ.800 விலை போனது. ஏலம் போகாத மீன்களை ரூ.100 விலையில் சிறு கூறுகளாக விற்றனர். அதிக மீன்கள் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
News November 8, 2025
குமரி: பைக் விபத்தில் வாலிபர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி வாலிபர் பைத்தில் சென்றுகொண்டிருந்தார். பைக் ரோட்டில் கிடந்த பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி வாலிபர் கிழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே வாலிபர் உயிரிழந்தார். விபத்துக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


