News March 29, 2025
கவுன்ட்டரில் எடுத்த டிக்கெட்டை ஆல்லைனில் ரத்து செய்யலாம்

ரயில்வே ஸ்டேஷன் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை இனி ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். IRCTC இணையதளம் அல்லது 139 என்ற எண்ணில் அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ரத்து செய்யலாம். பின்னர், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுன்ட்டரில் கொடுத்து, தங்களின் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 31, 2025
இரவு சாப்பாட்டை எப்போது சாப்பிட வேண்டும்?

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் சிலர் இரவு சாப்பாட்டை 11 மணிக்கு சாப்பிடுகின்றனர். ஆனால், இது மிகவும் தவறானது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சூரியன் மறைந்தவுடன் நமது உடலில் மெலடோனின் என்ற தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் சுரக்கும் என்றும் அது அதிகம் சுரப்பதற்குள் உணவருந்திவிடுவது நல்லது என்றும் கூறுகின்றனர். தாமதமாக சாப்பிடுவது தூக்கத்தை கெடுக்கும்.
News March 31, 2025
நாய்க்கடிக்கு சிறுவன் பலி

சேலத்தில் தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு சிறுவனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதனை அவர் வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறார். திடீரென நேற்று சிறுவனின் உடல்நலன் குன்றவே, பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 31, 2025
டெல்லி பயணம்… செங்கோட்டையன் பதில் இதோ!

‘டெல்லி சென்றீர்களா?, தொடர் மௌனத்திற்கு காரணம் என்ன?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மௌனம் அனைத்தும் நன்மைக்கே என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், செங்கோட்டையன் தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், ஒற்றை வரியில் அவர் பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.