News April 8, 2025
எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: TN அரசு

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் மக்கள் பொருள்களை வாங்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், TN-ல் முதல்கட்டமாக 3,139 ரேஷன் கடைகளும், 2-ம் கட்டமாக 5,000 கடைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக 10,000 கடைகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
மேகதாது அணைக்கு அனுமதி வழங்கவில்லை: துரைமுருகன்

மேகதாது அணை கட்ட SC எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடகா தன்னிச்சையாக அறிக்கை தயாரித்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு SC உத்தரவிட்டிருந்தது.
News November 13, 2025
ரிலீசுக்கு முன்பே ₹325 கோடி ஈட்டிய ‘ஜனநாயகன்’

ரிலீசுக்கு முன்பே விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ கோடிகளை குவித்து வருகிறது. தமிழக திரையரங்க உரிமை ₹100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ₹80 கோடிக்கும், ஆடியோ உரிமை ₹35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. மேலும் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ₹110 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வருவாய் ₹325 கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் வின்னராக மாறுவாரா ‘ஜனநாயகன்’..?
News November 13, 2025
விஜயகாந்த் வீட்டில் போலீஸ் குவிப்பு.. பதற்றம் உருவானது

சமீப காலமாக, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்று, பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸ் குவிக்கப்பட்டு அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் இது புரளி என்பது சோதனையில் தெரியவந்தது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், KS ரவிக்குமார், சாக்ஷி உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.


