News April 8, 2025

எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: TN அரசு

image

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் மக்கள் பொருள்களை வாங்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், TN-ல் முதல்கட்டமாக 3,139 ரேஷன் கடைகளும், 2-ம் கட்டமாக 5,000 கடைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக 10,000 கடைகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News October 30, 2025

‘சக்தித் திருமகன்’ திருட்டு கதையா?

image

விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் கதை தன்னுடையது என கூறி, அதற்கான சில ஆவணங்களை இணைத்து சுபாஷ் சந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு, 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை என தெரிவித்துள்ளார். மேலும், இன்னொருவர் கதையை திருடி எழுத வேண்டிய இயலாமை தனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.

News October 30, 2025

கேரளாவில் தொடங்கிய SIR

image

<<18130099>>கேரளாவில் <<>>ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட பிரதான கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல் Enumeration Form அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

ADMM-Plus மாநாடு: மலேசியா செல்கிறார் ராஜ்நாத் சிங்

image

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!