News April 8, 2025
எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: TN அரசு

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் மக்கள் பொருள்களை வாங்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், TN-ல் முதல்கட்டமாக 3,139 ரேஷன் கடைகளும், 2-ம் கட்டமாக 5,000 கடைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக 10,000 கடைகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
விருதுநகர்: 12th தகுதி.. ரூ.21,700 சம்பளத்தில் வேலை உறுதி!

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <
News November 26, 2025
பிரபல நடிகர் காலமானார்.. பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகர் தர்மேந்திரா (89) மறைந்த அன்றே, அவரது இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடந்ததால், பலரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால், நேரில் செல்ல முடியாத நட்சத்திரங்கள், தற்போது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த வார இறுதியில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் நட்சத்திர நடிகர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
News November 26, 2025
அதிகார திமிர்: கம்பீரை தாக்கிய கோலியின் அண்ணன்

தெ.ஆ., எதிரான டெஸ்ட்டில் இந்தியா திணறுவதால் பலரும் கம்பீரை விமர்சிக்கின்றனர். இந்நிலையில், விராட் கோலியின் சகோதரர் விகாஸும் மறைமுகமாக கம்பீரை தாக்கியுள்ளார். ஒருகாலத்தில் வெளிநாட்டு மண்ணில் கூட அசால்ட்டாக வெற்றிபெற்ற IND அணி தற்போது சொந்த மண்ணில் திணறுவதாக கூறியுள்ளார். மேலும், ஒழுங்காக இருந்த விஷயங்களை மாற்றி, அதிகாரம் செலுத்த முயற்சித்த ஒருவரால்தான் இது நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


