News April 8, 2025
எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: TN அரசு

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் மக்கள் பொருள்களை வாங்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், TN-ல் முதல்கட்டமாக 3,139 ரேஷன் கடைகளும், 2-ம் கட்டமாக 5,000 கடைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக 10,000 கடைகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
திமுக அரசு பதற்றத்தை உருவாக்குகிறது: G.K.வாசன்

மத நம்பிக்கை உடையவர்களால் எந்த பதற்றமும் ஏற்படாது, அவர்களின் ஒரே குறிக்கோள் முறையான வழிபாடு மட்டுமே என G.K.வாசன் கூறியுள்ளார். ஆனால் பதற்றம் ஏற்படுவதாக கூறி திமுக நடுநிலைமையோடு செயல்படவில்லை என்ற அவர், தேர்தல் காரணமாகவே அவர்கள் இவ்வாறு நடப்பதாக மக்களே சந்தேதிக்கின்றனர் எனவும் பேசியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் அரசே செயற்கையாக ஒரு பதற்றத்தை ஏற்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 6, 2025
புதிய பாபர் மசூதியின் தற்போதைய நிலை என்ன?

1992, இதே நாளில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2019-ல் SC அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியிலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான வரைபடத்தை இறுதி செய்யும்பணி முடியும் நிலையில் உள்ளதாக இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான காலக்கெடு 2026, ஏப்ரலில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
News December 6, 2025
Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலையும் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற <


