News March 12, 2025
நேபாளத்தில் ட்ரெண்டாகும் யோகி ஆதித்யநாத்!

நேபாள் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷாவை வரவேற்க, முடியாட்சி ஆதரவு இயக்கம் (RPP), அந்நாட்டு தலைநகர் காத்மண்டுவில் பேரணி நடத்தியது. அதில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. 2025 ஜனவரியில் முன்னாள் அரசர் ஷா, உ.பி வந்த போது யோகியை சந்தித்தார். ஆனால், RPPக்கு கெட்ட பெயரை உண்டாக்க ஆளும் அரசால் செய்யப்பட்ட சதி இது என RPP குற்றஞ்சாட்டியுள்ளது.
Similar News
News March 3, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்து செஞ்சி வே. ஏழுமலையும் அதிமுகவில் இணைந்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்து அவர் மீண்டும் தாய் கழகம் திரும்பியுள்ளார். விழுப்புரம், தி.மலை மாவட்டங்களில் முக்கிய முகமாக அறியப்படும் ஏழுமலை, அதிமுக சார்பில் MP, MLA உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
News March 3, 2026
தப்பான கோணத்தில் போட்டோ எடுக்குறாங்க: ருக்மினி வசந்த்

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகளை தவறான கோணங்களில் போட்டோ எடுப்பதாக ருக்மினி வசந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். உடலை மட்டும் ஒரு பொருளாக கருதி Zoom செய்து எடுக்கப்பட்டு SM-ல் அவை பகிரப்படுகின்றன; திட்டமிட்டு ஒரு சில நபர்கள் செய்யும் இந்த செயல் அவமரியாதைக்குரியது & ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். அத்துடன் தாங்கள் கலைக்காக இருக்கிறோம், இப்படிப்பட்ட காட்சிகளுக்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்!

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், வேட்பாளர் யார் என்பதை பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். சட்டமன்ற தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பு இன்னும் ஒருவாரத்தில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார். அதேசமயம் ராஜ்யசபா சீட் சுதீஷுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


